உன்னை
வாஞ்சையோடு அழைக்காத
வார்த்தைகள் அனைத்துமே
துருப்பிடித்து தான் போனது .....
அழுதாலும் சிரித்தாலும் பசித்தாலும் தன் தாயை தேடியே ஓடும் பிள்ளையை போல்
உன்னைத் தேடியே ஓடுகிறது என் மனமெனும் குழந்தை
மலைமுகட்டின் உச்சியில் நின்று தான் பறந்த கானகத்தை கண்டு விம்மும் சிறகொடிந்த பறவை போல் …
கனவுகளை சுமந்து பறந்த காலங்களை எண்ணி அசைபோட்டு விம்முகிறது மனமெனும் சிறகொடிந்த பறவை ....